உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அட்சய திருதியை; கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை.. பக்தர்கள் பரவசம்

அட்சய திருதியை; கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை.. பக்தர்கள் பரவசம்

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய திருதியையொட்டி,  டி.எஸ்.ஆர். பெரியதெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சியளித்தனர். இதில் சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணிசுவாமி, ராமசுவாமி, ஆதிவராகசுவாமி, ராஜகோபாலசுவாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட 12 கோவில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்திலும், எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன் அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்தனர். இந்த 12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர, ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்பதால் ஏராளமானோர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !