வைகாசி மாத பிறப்பு; தங்க கவசத்தில் அருள்பாலித்த கோவை பிரசன்ன மகா கணபதி
ADDED :589 days ago
கோவை; ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் தங்ககாப்பு கவசத்தில் பக்தர்களுக்கு விநாயகப் பெருமான் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.