உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறுங்குடி கோயிலில் 5 நம்பிகள் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம்

திருக்குறுங்குடி கோயிலில் 5 நம்பிகள் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம்

களக்காடு : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி திருவிழாவில் 5 நம்பிகளும் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம் நடந்தது. திருங்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி தேரோட்ட திருவிழா கடந்த 2ம் தேதி காலை ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா சென்று வருகிறார். 5ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் இரவு கருட வாகனத்தில் 5 நம்பிகளும் வீதிஉலா வந்தனர். நேற்று அதிகாலை மேலரதவீதியில் 5 நம்பிகளும் சித்த மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் திருக்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நம்பியை தரிசனம் செய்தனர். வரும் 11ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !