திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்; பக்தர்கள் பரவசம்
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் செண்பகதியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளாற்றில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் குரோதி வருடம் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 5ம் தேதி முதல் விநாயகர் உற்சவமும், 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும்.13ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பபல்லக்கு வீதி உலா நடந்தது. நேற்று செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும், இன்று செண்பகத் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானம் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 17ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும். வீகும் 19ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. 20ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 21ம் தேதி தெப்ப உற்சவமும், வரும் 22ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.