கோபத்துடன் இருக்கும் நரசிம்மருக்கு தினமும் நடக்கும் சந்தன அபிஷேகம்!
ADDED :543 days ago
‘ஓம் இரண்யாய நம’ என்று தன்னுடைய பெயரைச் சொல்ல மறுத்த மகன் பிரகலாதனை அசுரனான இரண்யன் கல்லைக் கட்டி கடலில் துாக்கிப் போட்டான். அவன் வெளியில் வர முடியாதபடி பெரிய மலையையும் வைத்து அழுத்தினான். பக்தனைக் காப்பாற்ற மகாவிஷ்ணு அம்மலையைப் பிளந்தார். இந்த இடமே விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள சிம்மாசலம். மலையை குடைந்து பாறையால் ஆன தேரைக் குதிரைகள் இழுப்பது போல் இங்குகோயில் உள்ளது. மூலவர் நரசிம்மர் கோபத்துடன் இருப்பதால் தினமும் சந்தன சாத்துபடி நடக்கிறது. துன்பம் நீங்கவும், நிம்மதி நிலைக்கவும் பக்தர்கள் சந்தன அபிஷேகம் செய்கின்றனர்.