சிவனடியார் மீது பக்தி செலுத்துவதும் சிறந்தது!
ADDED :536 days ago
திருப்பூர்; திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டம், அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்ற மகேஸ்வர பூஜை நேற்று நடந்தது.
கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள், செஞ்சேரி திருநாவுக்கரசு மடத்தின் தலைவர் முத்து சிவராமசாமி அடிகளார் முன்னிலையில், ஒவ்வொரு திருமுறையில் இருந்து ஒரு பாடல் வீதம், பனிரெண்டு திருமுறைகளில் இருந்து பதிகங்கள் விண்ணப்பம் செய்து, இறைவழிபாடு செய்யப்பட்டது. திருக்கயிலாய வாத்திய இசையுடன், மகாதீபாராதனை நடந்தது.
பக்தியை வளர்க்கணும்!
சாதனையாளர் விருது
நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற அறிலையத்துறை இணை கமிஷனர் நடராஜன், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் முன்னாள் தலைவர் தங்கமுத்து, அவிநாசி சைவர் திருமடம் திருமூர்த்தி, பெருந்துறை விஜயகுமார் ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.