ஆனந்தகிரி பெரிய மாரியம்மனுக்கு குடம் குடமாக பால் அபிஷேகம்
ADDED :521 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மே 7 ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 15 தினங்கள் நகரில் சுவாமி உலா வருதல், திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சக்தி கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் பறவைக் காவடி எடுத்தல் ஆகியன நடந்தன. தொடர்ந்து மறுபூஜையில் நேற்று ஆயிரக்கணக்கானோர் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளியம்மன் கோயிலிருந்து ஏராளமானோர பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். சப்பர ஊர்வலத்தில் சுவாமி நகர் வலம் வந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.