உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்

தங்கமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்

அவிநாசி; எஸ்.மேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தங்க விநாயகர்,ஸ்ரீ தங்க முருகன், ஸ்ரீ தங்க மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது.

அவிநாசி வட்டம், செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட எஸ். மேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை தங்க முருகன், ஸ்ரீ தங்கமாரியம்மன் உள்ளேற்ற பரிவார மூர்த்திகளின் கோவிலில் 12ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விஜயகுமார சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இன்று முதல் கால யாக வேள்வி பூஜையில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மிருத்ஸங்கிரஹணம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஹோமம், நவக்ரஹ ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றது. நாளை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையில் வேதிகார்ச்சனை, கோபுர கலசம் ஸ்தாபனம் ,ஸ்ரீ ஸகஸ்ர நாம பாராயணம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெறுகின்றது. கும்பாபிஷேக விழா முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ தங்க மாரியம்மன், ஸ்ரீ தங்க முருகன் உள்ளிட்ட பரிவார மூர்த்தி களின் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !