அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :499 days ago
அரும்பாக்கம்: பிரசித்தி பெற்ற, அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, பிரசித்தி பெற்ற பாஞ்சாலி அம்மன் கோவிலின் 41ம் ஆண்டு தீமிதி திருவிழா துவங்கி உள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை, அதே பகுதியில் உள்ள உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள் 1,008 பால்குடம் ஏந்தி, தீச்சட்டியுடன், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானமும், காப்பு கட்டுதலும் நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின், தீமிதி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.