நத்தத்தில் வாராஹி அம்மனுக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை
ADDED :591 days ago
நத்தம், நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோவிலில் வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவிலில் யாகசாலை அமைக்கப்பட்டு வாராஹி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகமும்,சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.