உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டணி கட்சிகள் உதவியுடன் பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார்: ஜோதிடர் கணிப்பு

கூட்டணி கட்சிகள் உதவியுடன் பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார்: ஜோதிடர் கணிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு நாடி ஜோதிடம் மிகவும் பிரபலமாகும். வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் புகழ்பெற்றதாக உள்ளது. தினம் தோறும் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் இங்கு வந்து நாடி ஜோதிடம் பார்த்து செல்கின்றனர். இதற்காக இங்கு பல நாடி ஜோதிட நிலையங்கள் உள்ளன. மகா சிவ நாடி ஜோதிடம், அகத்தியர் நாடி, பிருகு நாடி உள்ளிட்ட பல்வேறு சித்தர்களின் நாடிகள் ஓலைச்சுவடி வடிவில் ஜோதிடம் கூறப்படுகிறது. தொழில், மன வாழ்க்கை, ஆரோக்கியம், எதிர்காலம் இவை பற்றி ஓலைச்சுவடிகள் சித்தர்களின் பாடல் வடிவில் நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு, யார் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறித்து மகா சிவ நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. ஓலைச்சுவடியில் பாடல் வடிவில் சிவனின் இளைய மகன் பெயர் கொண்ட நபர் நல்லவர்கள் துணையுடன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று ஆருட காண்டம் நாடி ஜோதிடத்தில் ஓலைச்சுவடி வந்துள்ளது. 

இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் பிரபல மகா சிவ நாடி ஜோதிடர் முனைவர் சிவசாமி தெரிவிக்கும் போது கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று நாடியில் வந்தது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என நாடி ஜோதிடம் பார்க்கப்பட்டது. தற்போது சிவனின் இளைய மகன் என முருகன் பெயர் கொண்டவர் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என நாடியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கணிப்புகள் வெளிவந்திருக்கும் நிலையில் நாடி ஜோதிடத்தில் மூலம் தேர்தல் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !