உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மாரியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை மாரியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி அருகே ராஜகவுண்டன்பட்டியில் விநாயகர், ராஜகாளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து வழிபட்ட பின்னர் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !