உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு திருவிழா, டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு

இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு திருவிழா, டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு

மானாமதுரை: இடைக்காட்டூர் சர்ச்சில் 2 நாட்களாக நடைபெற்ற பாஸ்கு திருவிழாவில் டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக கலைஞர்கள் நடித்துக் காட்டியதை தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.


சிவகங்கை மாவட்டம்‌ மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் உள்ள திரையிருதய ஆண்டவர் சர்ச்சில் வருடம் தோறும் இரண்டு நாட்கள் தொடர்ந்து பாஸ்கு திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த வருடத்திற்கான விழா நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு திருப்பலியுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு சர்ச் வளாகத்தில் மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் இரவு 10:00 மணிக்கு சர்ச்சுக்கு எதிரே உள்ள கிறிஸ்து அரங்கில் 147ம் ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு டிஜிட்டல் திரைகள் மற்றும் லேசர் விளக்குகள் மூலமாக இவ்விழாவிற்காக விரதம் இருந்து வந்த கலைஞர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகத்தில் இயேசுவின் பிறப்பு,சீடர்களுக்கு அருளாசி வழங்குதல், குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்தல், தொழு நோயாளிகளைக் குணமடையச் செய்தல், இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிதல், மீண்டும் அவர் உயிர் பெறுதல் உள்ளிட்ட பல காட்சிகளை நடித்து காண்பித்தனர். இதனை காண்பதற்காக மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வருகை தந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !