குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :571 days ago
புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமிகள் கோவிலில், குரு பகவானை ஏராளமானோர் வழிபட்டனர். கருவடிக்குப்பத்தில், ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆங்கில மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். நேற்று இந்த கோவிலில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. குரு பகவான், சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில், காட்சி அளித்தார்.