/
கோயில்கள் செய்திகள் / வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
வேலூர் ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :471 days ago
வேலூர்; கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை டைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தேன்,பால், தயிர், சந்தனம், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மலர் மாலைகள், வில்வ இலை மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகள் நடந்தது. பின்னர் சாமி கோபுரம் தரிசனத்திற்கு பின்னர் திரு வீதி உலாவுக்கு மேளதாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.