மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
447 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
447 days ago
மயிலாடுதுறை ; மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர் வார்த்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கஸ்தூரிபாய் தெருவில் பழமை வாய்ந்த தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 33 அடி உயரத்தில் புதிதாக முருகன் சுதை சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த பத்தாம் தேதி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜை இன்று காலை நிறைவடைந்த நிலையில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோபுர கலசத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து 33 அடி உயர முருகன் சிலை மற்றும் மூலவருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
447 days ago
447 days ago