உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி கடைசி செவ்வாய்; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

ஆனி கடைசி செவ்வாய்; பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

கோவை; பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி மாதம்  கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் வெண்பட்டுவஸ்திரத்தில் புஷ்ப அலங்காரத்துடன் விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !