உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல நுாற்றாண்டுகளாக மூடி கிடந்த பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு

பல நுாற்றாண்டுகளாக மூடி கிடந்த பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு

நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு பக்கத்தில் தீர்த்த கிணறு உள்ளது. கோவில் பூஜாரிகள் சுரங்கப்பாதை வழியாக கிணறுக்கு சென்று, தினமும் தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்ய பயன்படுத்துவர். கிணறுக்கு இரும்புக் கம்பிகளால் ஆன மூடி பொருத்தப்பட்டிருந்தாலும், பக்தர்கள் அந்த துவாரம் வழியாக நாணயங்களையும் நகைகளையும் காணிக்கையாக போடுகின்றனர். பல நுாற்றாண்டுகளாக நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் கிணற்றில் கிடக்கின்றன. தொடர்ந்து, கிணறு மூடியை திறந்து, நாணயங்களை சேகரித்துவிட்டு, கிணறை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !