உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை.. கோவையில் பக்தர்கள் பரவசம்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை.. கோவையில் பக்தர்கள் பரவசம்

கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 


துடியலூர் ஐடிஐ பின்புறம் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் சிம்ம வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார். விளாங்குறிச்சி சங்கரா நகர் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு இன்று2வது ஆடி வெள்ளி  சிறப்பு அலங்காரம் பூஜை  நடைபெற்றது. கோவை தாமஸ்வீதியில் எழுந்தருளியுள்ள இருக்கன்குடி மாரியம்மன், பிஸ்கட் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல நரசிம்மநாயக்கன்பாளையம் காமாட்சி  அம்மன் கோவில், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !