திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :639 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண பக்க்ஷ ஆடி மாத ஏகாதசி உத்சவத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் திவ்ய அலங்காரத்துடன் சிறப்பு சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.