மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
400 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
400 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
400 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சரவணப்பொய்கையில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. கோயிலில் இருந்து பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டு, ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்த்து, பூஜை நடந்தது. பின்பு சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடத்தப்பட்டது.* மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து சுந்தர மகாலிங்கம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* தென்பரங்குன்றம் பிரத்யங்கிரா தேவி கோயிலில் மிளகாய் வற்றல் யாகம் நடந்தது பின்பு மூலவருக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
400 days ago
400 days ago
400 days ago