கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ADDED :423 days ago
கோவை; ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவை தடாகம் ரோடு ராயபுரம், தண்டு மாரியம்மன் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் மூலவர் அம்மன் பத்ரகாளி அலங்காரத்திலும், உற்சவர் தண்டு மாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தண்டுமாரியம்மனை தரிசனம் செய்தனர்.