உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி செவ்வாய்; புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராபுரம் சுப்பிரமணியர்

ஆடி கடைசி செவ்வாய்; புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராபுரம் சுப்பிரமணியர்

கோவை; ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ். 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வள்ளி சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !