உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருவாடானை; திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று இரவு 10:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாள், வல்மீகநாதர் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தார்கள் மற்றும்  வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !