குன்றக்குடியில் 699 வது ஆண்டு குருபூசை விழா
காரைக்குடி; குன்றக்குடியில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளின் 699 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதீனம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், புதிய அன்னதான கட்டடம் திறப்பு விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது. புதிய கட்டிட திறப்பு விழாவில், குன்றக்குடி பொன்னம்மாள் அடிகளார் தலைமையேற்றார். மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். கார்த்தி எம்.பி., கலந்து கொண்டார். எஸ்.ஆர்.எம்., பல்கலை., நிறுவனர் ரா. பாரிவேந்தர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நூலை முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் வெளியிட எஸ்.ஆர்.எம்., பல்கலை., நிறுவனர் ரா. பாரிவேந்தர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில், ரா. பாரிவேந்தருக்கு திருப்பணி செம்மல் என்னும் பட்டத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் பேசினார்.