உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவதிருப்பதி திருக்கோளூர் வைத்தமாநிதி கோயிலில் கருடசேவை கோலாகலம்

நவதிருப்பதி திருக்கோளூர் வைத்தமாநிதி கோயிலில் கருடசேவை கோலாகலம்

ஆழ்வார்திருநகரி; திருக்கோளூர், வைத்தமாநிதி கோயிலில் கருடசேவை நடந்தது.  நவதிருப்பதிகளில் 8வது தலமான, திருக்கோளூர் வைத்தமாநிதி கோயிலில், கடந்த 30ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்து. தினசரி இரவு 7:00 மணிக்கு சுவாமி வாகனங்களில் புறப்பாடு நடக்கிறது. நேற்று 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு விஸ்வரூபம். 7:29 மணிக்கு திருமஞ்சனம். 8:00 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மாடவீதி புறப்பாடு நடந்தது. 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். ஹோமம் பூர்ணாகுதி, திருவாராதனம். சாத்துமுறை நடந்தது. பின்னர் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு சாயரட்சை. 5:30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வாருக்கு அலங்காரம் நடந்தது. இரவு 7:29 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி. ரதவீதி புறப்பாடு நடந்தது. வரும் 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அர்ச்சகர்கள் ரகு. பாலாஜி. சீனிவாசன். ஸ்தலத்தார் திருவாய்மொழிபிள்ளை திருவேங்கடாச்சாரி. ஸ்ரீதரன் ஸ்வாமி, சடகோபன் சுவாமி. அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் என்ற கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன். ராஜலட்சுமி செந்தில் குமார். காளிமுத்து. நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி. ஊர் தலைவர் கிருஷ்­ணன் உட்­பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !