பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது இதன் பொருள் என்ன?
ADDED :4859 days ago
நவக்கிரகங்களில் விவேகமும், பண்பும் நிறைந்தவர் புதன். ஒருவருடைய அறிவுத்திறனையும், சுபாவத்தையும் நிர்ணயிப்பவராக இவர் இருக்கிறார். புதனின் சுபபலன் ஒருவருக்கு கிடைக்காவிட்டால், ஒருவர் திறமையுள்ளவராக இருந்தாலும், அவரது உழைப்பு வீணாகப் போய் விடும். இவ்வளவு சிறப்புமிக்கவரின் ஆசி நமக்குத் தேவையல்லவா? அதைத் தான் உயர்வு கருதி இப்படி சொல்லியுள்ளனர். பொன்னன் எனப்படும் குருவின் அருள் கிடைத்தாலும், புதன் அருள் கிடைக்காது என்பது இதன் பொருள்.