மங்களேஸ்வரி அம்மன் கோவிலில் முளைப்பாரி விழா
ADDED :416 days ago
கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு மங்களேஸ்வரி நகரில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த செப்., 10 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் விநாயகர், மங்களேஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பத்து நாளும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதியுலா வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிழக்கு மங்களேஸ்வரி நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.