ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :402 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சன்னதியில் உள்ள கால பைவரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. கால பைரவர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர் குழு, நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.