உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி, அன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க காப்பு அலங்காரமும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு சுவாமி வைஷ்ணவி தேவி அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூசாரிகள் தாலாட்டுப் பாடல்களைப் பாடி ஊஞ்சல் உற்சவத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் அம்மன் பாடல்களை பாடி கற்பூர தீபம் ஏற்றி வணங்கினர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். நேற்று மாலையில் துவங்கி விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தபோதும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர். சென்னை, கடலுார், விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !