ராமபிரானுக்கு வலம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்யும் பீளமேடு ஆஞ்சநேயர்
ADDED :336 days ago
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் ராமபிரானுக்கு வலம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்யும் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார்.கோவை அவினாசி ரோடு பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச ஆஞ்சநேயர் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, ராமபிரானுக்கு வலம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்யும் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.