சஷ்டி வழிபாடு; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :369 days ago
கோவை; ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புரட்டாசி மூன்றாவது செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
இதேபோல், புரட்டாசி மூன்றாவது செவ்வாய்க்கிழமை மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதி ஸ்ரீ ஞான ஈஸ்வரர் கோவிலில் அம்மன், முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.