வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :368 days ago
வால்பாறை; வால்பாறையில் உள்ள முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், புரட்டாசி மாத சஷ்டி பூஜையான இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன்பின், காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களை கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகனை மகிழ்வித்தனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் சஷ்டி பூஜை நடந்தது.