உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; நவராத்திரி விழா நிறைவு

பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; நவராத்திரி விழா நிறைவு

பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. பழநி கோயிலில் விடுமுறை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். பழநி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். வின்ச் மூலம் மலைக்கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய மலைக் கோயிலில் பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பக்தர்கள் சிலர் கட்டுப்பாட்டை மீறி அலைபேசிகளை மலைக் கோயிலுக்கு கொண்டு சென்றனர். திரு ஆவினன்குடி கோயில் அருகே அருள்ஜோதி வீதியில் முறையாக பார்க்கின் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். நவராத்திரி விழா நிறைவு பெற்று நேற்று முதல் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !