கற்பக விநாயகர் கோவில் 108 சங்காபிஷேகம் கோலாகலம்
ADDED :337 days ago
திருப்பூர்; திருப்பூர் காலேஜ் ரோடு, துவாரகை நகரில், ஸ்ரீகற்பக விநாயகர் கோவில், 29ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, விநாயகப்பெருமானுக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. 108 சங்காபிஷேகம் மற்றும் சங்கு அலங்கார பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.