உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தாபுதுார் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா நாளை துவக்கம்

சித்தாபுதுார் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா நாளை துவக்கம்

கோவை: சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலின் 57வது உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.


கோயமுத்துார் அய்யப்பசேவா சங்கத்தின் 71வது ஆண்டு விழாவும் அத்துடன் நடைபெறுகிறது. பெருந்திருவிழா, காலையில் வழக்கமான பூஜைகளுடன் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் கொடியேற்று விழா நடக்கிறது. அறநிலைய துறை இணை கமிஷனர் ரமேஷ் முன்னிலை வகிக்கிறார். செறுதாழம் சந்திரன் மாரார் குழுவின் செண்டைமேள கச்சேரி நடக்கிறது.


மார்ச் 18 காலை 7:00 மணிக்கு உற்சவ பூஜைகளும், இரவு 7:00 மணிக்கு வீரமணிராஜு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 19 காலை 7:00 மணிக்கு நிறைபறை சமர்பித்தல் நடக்கிறது.மார்ச் 23 ஏழாம் நாள்மாலை அலங்கரிக்கப்பட்ட அய்யப்ப சுவாமி, மூன்று யானைகள் சூழ செண்டைமேளம், பஞ்ச வாத்தியம் முழங்க ஆவாரம்பாளையம் விநாயகர் கோவிலில் புறப்பட்டு பாரதியார் சாலை, வி.கே.கே.மேனன் சாலை சந்திப்பு வழியாக கோயிலை வந்தடைவார். மறுநாள் அய்யப்பன் ஆறாட்டு விழா. மாலை 5:00 மணிக்கு, மூன்று யானைகளுடன் கோவிலில் புறப்பட்டு சின்னசாமி நாயுடு சாலை, சத்தி சாலை, கிராஸ்கட் ரோடு 11ம் நம்பர் வீதி, நுாறடி சாலை வழியாக சித்தாபுதுார் ஆறாட்டு குளத்தை அடைகிறது. ஆறாட்டு முடிந்து கோவிலுக்குள் எழுந்தருளுகிறார். தொடர்ந்து சீவேலி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !