உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அன்னூர்; அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக ஆண்டு விழா இன்று நடந்தது. விழாவில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில் ஹோமம், சுவாமி திருக்கல்யாணம், மாங்கல்ய தாரணம் மற்றும் சாற்றுமுறை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக, கரி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, சங்கரன், தாசபளஞ்சிக மாதர் சங்கத்தினர், குலதெய்வ வழிபாட்டுக் குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !