கார்த்திகை கடைசி சனி; லட்சுமி ஹயக்ரீவர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :632 days ago
திருப்பூர்; மொண்டிபாளையம் பகுதியில் கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மொண்டிபாளையம் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதியில் மூலவருக்கு அபிஷேகம். பூஜைகள் நடந்தன. இதில் லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமன் மற்றும் ஹயக்ரீவரை தரிசனம் செய்தனர்.