உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் மார்கழி வழிபாடு; பெருமாளுக்கு சிறப்பு பூஜை

கோயில்களில் மார்கழி வழிபாடு; பெருமாளுக்கு சிறப்பு பூஜை

போடி; மார்கழி திங்களை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.


* போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகன் வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கீழச் சொக்கநாதர், மேலச் சொக்கநாதர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள சிவனுக்கும், பத்திரகாளிபுரம், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !