உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்லில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்; திண்டுக்கல் அனுமந்தநகரில் ஐயப்ப சுவாமிகள் குழுசார்பில் 18ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பரை வழிபட்டனர். இதை தொடர்ந்து காலை 5:00 மணி முதல் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதிகளவிலான பக்தர்கள் ஐயப்பா பக்தி கோஷத்தோடு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. அ திண்டுக்கல் சுற்று பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !