உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை; பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை; பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை  மலை உச்சியிலிருந்து ராட்சத மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 4-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10ம் நாளான 13-ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்  அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோவலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது  மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்து நிறைவு பெற்றது.  அதனைத் தொடர்ந்து மலை மீது இருந்த கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டது. கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.  இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். மகா தீப கொப்பரையில் சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம் ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !