ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :381 days ago
நத்தம்; நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் 13-ஆம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் மண்டல பூஜையில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி ஐயப்பனுக்கு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. பின்னர் அய்யனார் தீர்த்தம் அழைத்து வர கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் , தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஐயப்பன் ரத வீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமி முதலில் பூக்குழி இறங்க சிறுவர்கள் முதல் 100க்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.