உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஷீரடி சாய்பாபா கோயிலில் 22ம் ஆண்டு விழா

திருத்தணி ஷீரடி சாய்பாபா கோயிலில் 22ம் ஆண்டு விழா

 திருத்தணி; திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய்நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின், 22ம் ஆண்டு, உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 5 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. காலை 9:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மஹன்யாச பூர்வக ஏகாதசி ருத்ராபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நண்பகல், 11:30 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு கலசநீர் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் 2:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, ஓம் சாய், ஸ்ரீசாய் ஜெய ஜெய சாய் நாம பஜனைக் குழுவினரால் பாடப்பட்டது. முன்னதாக, அதிகாலையில், காகட ஆரத்தி மற்றும் அபிஷேகம், மூலவருக்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாய்சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !