உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்

பெரம்பலுார்; பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மதுரை காளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி சுவாமி தரிசனம் செய்து அம்மனுக்கு பத்து சவரன் காசு மாலை மற்றும் பட்டுப்புடவை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.


புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி நேற்று மதியம் ஒரு மணியளவில் பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அம்மனுக்கு தனது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக, பத்து சவரன் காசு மாலை மற்றும் பட்டுப்புடவை சாத்தினார். இதைத்தொடர்ந்து, மகா தீபாரதனை தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த முதல்வர் உற்சவரை வணங்கினார். இதனை அடுத்து கோவில் பிரகாரத்தை வளம் வந்து அவர் கோவில் மண்டபத்தில் அமர்ந்தும், உள்பிரகாரத்தில் நின்றவாறும் தியானத்தில் ஈடுபட்டார். தரிசனம் முடிந்த பிறகு வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி : அடிக்கடி மதுர காளியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வர முடியவில்லை. இன்று வர வேண்டும் என்று நினைத்தேன் வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன். அம்பாளை பற்றி எனக்கு தெரியும் அவள் சக்தி என்ன என்று தெரியும் கண்டிப்பாக வேண்டுதலை நிறைவேற்றுவாள். 2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி வெற்றி வாய்ப்புக்காக அம்மனை வேண்டுதல் செய்தீர்களா என்று கேட்டபோது புன்னகத்தவாறு பதில் அளிக்காமல் சென்று விட்டார் அவருடன் அவரது கட்சி முக்கிய நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !