பழநி கோயிலுக்கு விதவிதமான காவடி எடுத்து வந்த பக்தர்கள்
ADDED :245 days ago
பழநி; பழநி கோயிலுக்கு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். பழநி கோயிலுக்கு தினம்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து வந்த பக்தர்கள் தொட்டில் காவடி எடுத்து வந்து அதில் குழந்தையை படி வழியாக தூக்கி வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் இடைப்பாடி சேர்ந்த பக்தர்கள் மயில் மயில் தோகை அலகு குத்தி வந்து காவடி எடுத்து தரிசனம் செய்தனர்.