அமராவதி புதூர் சாரதா தேவி கோயிலில் விளக்கு பூஜை
ADDED :348 days ago
காரைக்குடி; அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் உள்ள சாரதா தேவி கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில் கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி பேசினார். சாரதேஸ்வரி பிரியா அம்பா மற்றும் ராமகிருஷ்ண பிரியா அம்பா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவசங்கரி ரம்யா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையில் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.