உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கரூர்; கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று ஏப்., 3 காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா துவங்கியது.அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. ஏப்., 8ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 9ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம், 12 ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15 ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !