அவலுார்பேட்டை மாரியம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழா
ADDED :163 days ago
அவலுார்பேட்டை; அவலுார்பேட்டையில் பூ பல்லக்கு விழா நடந்தது. அவலுார்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மலர் தொடு வியாபாரிகள் சார்பில் பூபல்லக்கு விழா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம், தீபாரதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. மதியம் கோவில் வளாகத்தில் அவலுார்பேட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு பட்டி மன்றம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பூ பல்லக்கில் வீதி உலா, கேரளா செண்டைமேளம் மற்றும் வாண வேடிக்கையுடன் நடந்தது. கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.