ஆன்மிகத்தில் ஒருவர் முழுமை அடைந்துவிட்டார் என்பதை எப்படி அறியலாம்?
ADDED :4844 days ago
ஆன்மிகம் என்னும் கடலில் கரைசேர்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. விருப்பு, வெறுப்பற்ற ஞானிகளுக்கே பக்குவநிலை கைகூடும். நம்மைப் போன்ற சாமான்யர்கள் கடவுளின் திருவடியைக் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டியது தான். பரிபக்குவ நிலையை நமக்கு அவர் அருளும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.