உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலாயுதம்பட்டி அய்யனார் சுவாமி புரவி எடுப்பு திருவிழா

வேலாயுதம்பட்டி அய்யனார் சுவாமி புரவி எடுப்பு திருவிழா

நத்தம்; நத்தம் அருகே வேலாயுதம்பட்டியில் அய்யனார், வல்லடியார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் மாலை ஊர் மந்தையில் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கோவில் முன்பு கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை அய்யனார், வல்லடியார் மதிலை, குதிரை சிலைகள் வாணவேடிக்கைகள், வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்ந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !